என்னுடைய உளறல்கள்




Thursday, December 12, 2019

Happy birthday to Thalaivar - தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து

Thalaivar – Yes you got it right, there is a positive vibe in this word, its THE SUPER STAR RAJINIKANTH.

I wish Super Star A very Happy birthday.  

#HBDSuperStarRajinikanth is trending in twitter and the entire world is wishing this great man on his birthday.  December month is exciting due its significance to Thalaivar Birthday. When someone says December, a pop-up opens up in my mind with a picture of Thalaivar. J Yes seriously.


A peom of Mahakavi Bharathi about an extraordinary man comes to my mind, which reads as under: 

பிறர் வாட பல செயல்கள் செய்து 
நரை கூடி கிழப்பருவம் எய்தி 
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - 
நான் வீழ்வேனென்று நினைத் தாயோ ? (For translation click here)
Incidentally, the last sentence is the intro scene of Movie Pettai, (have a look at it here)
Rajini – A single word which gives his fan a lot of excitement.  He has not done different things but he has done things differently, like his cigarette flicks, fast walking, fast dialogue delivery, etc.  Recently, I saw a Show for tribute to Kamalhaasan in which the fast walk of rajini glued my eyes and I am awestruck to see a man, in his late sixties, showing so much energy.  Though his reflexes has slightly come down, he still carries the spirit.     

Rajini is popular among all the age group from 6 to 60 (ஆறிலிருந்து அறுபது வரை - one of his initial times' movie name).  One among those group is in her 30s and writing this blog. There are days in which I sent a greeting card to his address and expecting reply from this great manJ.

A movie should entertain you for 3 hours. Everybody has own issues in their personal life.  So why to come to a move to learn lessons and cry on the sentiments. Movie should make you forget worries and you should feel relaxed after watching it for hours. SuperStar's movie never failed in giving that exciting 3 hours of entertainment.

Nostalgic Scenes of some of Thalaivar movies 

https://www.youtube.com/watch?v=ZoPn8R5LZq0 – Watch from 6:55 minute to 8:01

In Thalaivar Style, the above links are only a Trailer, main picture is extraordinary. 

The success of an Actor lies in the audience base.  This man has fan across three generations and remain a SuperStar in the Industry when his contemporaries has retired from the field.The wish of every fan is that he should continue entertaining like this always. 

I once again wish him a very happy birthday and success for his forthcoming movies. 

With love, 
From a Fan Girl❤



Tuesday, December 10, 2019

Hi, 


Finally found by blogspot, (as if I am posting regularly):))))

Last post in 2012, 

Yaa, you read the year correctly, yes it was 2012,

Now we are in the end of 2019.

I am here to start blogging again. 

Expecting quiet a lot of traffic this time. 

Thank to my 9 Followers, if you still active, please do some commenting..

Wishing a Happy Blogging to the Self :) Caution Notice to Other.

AM BACK Without a Bang:)))


Sunday, February 19, 2012

வெகு நாட்களுக்கு பிறகு

வெகு நாட்களுக்கு பிறகு, இந்த பக்கம் எட்டி பார்க்க இன்று சற்று நேரம் ஒதுக்கியே ஆக வேண்டும் என்பதற்காக வந்தேன். வெகு நாட்கள் என்றால் சும்மா இல்லை, ஒரு வருட காலமாக இங்கு வரவில்லை.

இந்த ஒரு வருட காலத்தில் வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள் எத்துனை எத்துனை சந்தோஷங்கள், எத்தனை சோகங்கள், அத்துனையும் அடங்கியது தானே வாழ்க்கை!எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இனியாவது இந்த பக்கம் அடிக்கடி வர வேண்டும் என்று நினைக்கிறேன். நேரம் கிடைக்கவில்லை என்றாலும் நேரம் ஒதுக்கி வருகிறேன்.

இந்த நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள்:)

Friday, November 19, 2010

வணக்கம் சமையல்

அப்பாடா, ஒரு வழியா, எதை போடுவது போடுவதுன்னு யோசித்து யோசித்து, தலையெல்லாம் சொட்டையாவதற்கு முன்னாடி என் கண்ணில் பட்டது, சிறப்பு நிகழ்ச்சியாக ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, வணக்கம் சமையல் என்ற அருமையான, பெருமையா, அம்சமான நிகழ்ச்சி தான்

என்னடா அப்படி என்ன அந்த நிகழ்ச்சியில் இருக்குன்னு யோசிக்கிறீங்க, ஒரு பிரபலமான குக் (cook) கூட்டிட்டு வந்து சமைப்பாங்களாம். நமக்கு தான் வித விதமான சமைப்பது என்றால் அலாதி ப்ரியம் என்பதால், ரொம்பவே ஆர்வத்துடன் பார்த்தேன், எல்லாம் என் நேரம், அன்று ஏதோ சிறப்பு என்று சொல்லி நிகழ்ச்சி தொகுப்பவரும், அவரு கூட சேர்ந்து வந்த செஃபும் சேர்ந்து இரண்டு கதாநாயகிகளை அழைத்தார்கள். பாவம் ரெண்டு பேருமே தமிழ் தெரியா நாயகிகளாம் (தெரிந்தவர்களே, தெரியாம நடிக்கும் போது, பாவம் அதுக என்ன பண்ணும் ;(((  )

ஆனால், அவுங்களை கூட்டிட்டு வந்து எதுக்காக நம்ம உயிரை வாங்கணும்னு தான் எனக்கு தெரியலை ;(( ரெண்டு பேருக்கும் வெங்காயத்தை தெரியலை, அதை விட அதுல ஒண்ணு வெங்காயத்தை, தமிழில் உச்சிரித்தது தான் கொடுமையோ கொடுமை, அப்படி என்ன சொன்னாங்கன்னு யோசிக்கறீங்க, அது வெங்ககாயம்’னு சொன்னாங்க ;((

நொந்தே போயிட்டேன், ஆனாலும், என்னதான் செய்றாங்க என்ற ஆர்வக்கோளாறில் தொடர்ந்து பார்த்தால், முதலில் வாழைப்பூ பஜ்ஜிங்கற பேரில் ரெண்டும் சேர்ந்து ஒன்றை செய்தாங்க. எதை கேட்டாலும் தவறான ஒரு பொருளை எடுத்து காமித்தார்கள், அதை விட கொடுமை அந்த மாடர்ன் பெண்களுக்கு (ஹோட்டலில் போய் கண்டதை உள்ளே தள்ளும் அழகிகளுக்கு) க்ரீம் என்ன என்பது தெரியாமல் போனது தான் நம் துரதிர்ஷ்டம்.

தொலைக்காட்சி என்பது இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பார்க்கும் ஊடகமா இருந்து வருகிறது. குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சி முதல் எல்லாவற்றிலும் கலப்படம் தேவைதானா???

Sunday, October 24, 2010

உலக அரங்கில் இன்னுமொரு இந்தியன்

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்


திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.
 
இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.


பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.

தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்

http://www.akshayatrust.org/contact.php

Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India
Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in

மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்

http://heroes.cnn.com/vote.aspx

இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல நமக்கு வெட்கக்கேடும் கூட.
 


(மெயிலில் வந்த விஷயத்தை அனைவரின் கவனத்திற்காக இங்கு பதிவிடுகிறேன்)

Monday, September 20, 2010

அம்மா பாடல்கள்

உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே
(உயிரும்..)
தன் உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே
(தன் உடலில்..)

உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே
(உன் கண்ணில்..)
உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே
(உயிரும்..)

விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
(விண்ணை..)
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான் தாயைப் படைத்தான்
(உயிரும்..)

படம்: பவித்ரா
இசை: AR ராஹ்மான்
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்

வரிகள்: வைரமுத்து